திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

About Sivapuranam
.jpg?width=360&height=520&name=Manikkavasagar%20(1).jpg)

Thiruvachakam is an extraordinary collection of Shaiva hymns written by the exemplary Shaivite saint Manikkavasagar. Thiruvachakam constitutes the eighth volume of the twelve-volume compendium of songs on Shiva in Tamizh known as Thirumurai, written from the 6th-11th century CE by great poets in Tamil Nadu. Thirupperundurai Thala Varalaru
.
iOS App
2. Click the

3. Scroll down and select “Add to Home Screen”.
4. Tap “Add” on the top-right of your screen.
5. You can find a new icon on your screen.
.
Android App
2. Click the

3. Scroll down and select “Add to Home Screen”.
4. Tap “Add” on the top-right of your screen.
5. You can find a new icon on your screen.
சிவபுராணம்
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
* * * * *
தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்க
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்…. திருவாசகம் என்னும் தேன்
* * * * *
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்த
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்ச
விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடர
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியான
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருள
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும்
புழு அழுக்கு மூடி, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரன
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
* * * * *
திருச்சிற்றம்பலம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Reciting Guidelines

Commence your daily routine with reciting Sivapuranam between 4:30 and 6:00 AM.
-Feb-21-2022-05-47-57-95-AM.png)
Memorizing the stanzas and reciting will help you to focus on the prayer.
-2.png)
Recite with clarity of words in a slow and rhythmic manner.
.png?width=70&height=70&name=Untitled%20design%20(24).png)
Manickkavasagar himself advised us to understand the meaning and recite Sivapuranam.
th Century
st Padhigam
Lines
.jpg)
Thiruvasagam (1 - 51 Pathigam)
சிவ கயிலை திருவாசக சித்தர் திருக்கழுக்குன்றம் சிவ தாமோதரன் ஐயா, D.V ரமணி ஐயா மற்றும் பைரவர் சுவாமிகள் ஆகியோர் பாடிய திருவாசக பாடல்களின் YouTube லிங்க் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது, சான்றோர்கள் அனைவருக்கும் நன்றி. ஓம் நமசிவாய
Click here for Videos
Thiruvasagam Presentations
மாணிக்கவாசக பெருமான் அருளிய திருவாசகம் PPT வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது , திருவாசக முற்றோதலுக்கு ஏற்பாடு செய்வோர் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். ஓம் நமசிவாய
Temples on Google Map
.
Site Analytics
Sivapuranam Books Distributed - 3000
Sivapuranam.in Site Visits -1,590
.
Press Coverage
Frequently Asked Questions
We’d like to answers all your queries related to our services
What is Sivapuranam Mission?
The objective of this mission is to support Shiva devotees to practice and recite Sivapuranam and to get the blessings of Lord Shiva. We also develop and deploy websites for temples free-of-cost.
Who is running this program?
The program is run by Sivanady Venkadesh Narayanan, Principal Consultant at Fhyzics Business Consultants Pvt. Ltd. and former Indian Civil Servant [IRAS 2000 Batch].
How is this program funded?
The program is funded by Fhyzics Business Consultants Pvt. Ltd. – a business consulting organisation specialising in business analysis, supply chain management, procurement, and new product development.
Do you accept donations?
No, we don’t accept any donations. But we can connect you with some of the temple management team who are looking for financial support for temple works (Thiruppani) being carried out at various Shiva and Siddhar Temples across India.
Who wrote Sivapuranam?
Manickavasagar wrote Thiruvasagam. It contains 51 chapters or pathigam. Sivapuranam is the first chapter or pathigam. Sivapuranam is composed of 19 songs in 95 lines.
What are all the services offered by Sivapuranam Mission?
Our mission distributes free pocket size Sivapuranam book in temples and to Shiva devotees whoever fills the form in this website. Second, we develop and deploy websites for temples free-of-cost.